சாம்பல்நோய்: ஒய்டியம் எர்சிபோய்ட்ஸ்  எஃப் ஸ்பீசியஸ் ஜிசிபி 
              அறிகுறிகள்: 
                - உருவாகும் இளம் இலைகளில் வெள்ளை நிற  துகள் போன்று தென்படும் இதனால் இலைகள் சுருங்கி, உதிர்ந்துவிடும்.
 
                - இளம் பழங்களின் மேல் சிறியதாக வெள்ளை  நிற துகள் போன்று வளர ஆரம்பிக்கும், பின் அந்தத் துகள்கள் ஒன்று சேர்ந்து கடைசியில்  பழுப்பு நிறத்தில் இருந்து  ஆழ்ந்த பழுப்பு  நிறமாக மாறிவிடும்.
 
                - தீவிரமான நிலையில் முழு பழங்களையுமே  இந்தத் துகள்கள் மூடிவிடும்.
 
                - பாதிக்கப்பட்ட இளம் பழங்கள் முதிர்ச்சியடையும்  முன்பே உதிர்ந்துவிடும் அல்லது கெட்டியாகவும், வெடிப்புற்றும், வடிவம் இல்லாமலும்,  நன்கு வளர்ச்சி இல்லாமலும் காணப்படும்.
 
                - முதிர்ந்த பழங்களின் மேல் துறுப்பிடித்தது  போன்று தென்படும். சில சமயங்களில் முழு பயிருமே  சந்தைப்படுத்தலுக்கு உகந்தது இல்லாமல் இருக்கும்.
 
               
            கட்டுப்பாடு: 
                - நவம்பர் முதல் மற்றும் மூன்றாம் வாரத்தில் 0.5% டைனோகேப் 0.25% ஈரமான கந்தகத்தை தெளிக்கவும், அல்லது பழங்கள் பட்டாணியின் அளவு வளர்ந்தவுடன் தெளிக்க வேண்டும். 
 
                - ட்ரைட்டன்-ஏ.ஈ(அ) டீபால்(அ) சேன்டோவிட்டை ஒட்டுதலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
 
               
              
             | 
             
               
             
               |